search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
    X

    தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்த போது எடுத்த படம்.

    தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

    • நவ்வலடி பஞ்சாயத்தில் தூய்மை பாரத இயக்கம் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தில் மருத்துவ முகாம் நடந்தது.
    • நல்வலடி பஞ்சாயத்து அலுவலகத்தில் அதன் தலைவர் ராதிகா சரவணக்குமார் தலைமையில் நடந்தது.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள நவ்வலடி பஞ்சாயத்தில் தூய்மை பாரத இயக்கம் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தில் கரைசுத்து நல்வலடி, கரைசுத்து புதூர், கரைசுத்து உவரி, உவரி, முதுமொத்தன்மொழி, திருவம்பலபுரம் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    நல்வலடி பஞ்சாயத்து அலுவலகத்தில் அதன் தலைவர் ராதிகா சரவணக்குமார் தலைமையில் நடந்தது. கிராம பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சையா முன்னிலை வகித்தார். சரவணகுமார் வரவேற்றார்.

    மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திரா, பாண்டிராணி, வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் இசைக்குமார் மற்றும் பஞ்சாயத்து செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×