search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டையில்  கேரள அரசு பஸ் மோதி மெக்கானிக் பலி- நண்பருக்கு தீவிர சிகிச்சை
    X

    செங்கோட்டையில் கேரள அரசு பஸ் மோதி மெக்கானிக் பலி- நண்பருக்கு தீவிர சிகிச்சை

    • கேரளாவில் இருந்த வந்த அரசு பஸ் அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • போலீசார் சரவணனை மீட்டு நெல்லை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையை சேர்ந்தவர் ஹரிஹரன். மெக்கானிக். இவரது நண்பர் கலங்கரையை சேர்ந்த சரவணன் ( வயது 25). தனியார் நிறுவன ஊழியர். நண்பர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கி ளில் நேற்று சென்று கொண்டிருந்தனர்.

    செங்கோட்டையில் உள்ள கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே கேரளாவில் இருந்த வந்த அரசு பஸ் அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சரவணன் பலத்த காயங்களுடன் உயிரிருக்கு போராடி கொண்டிருந்தார்.இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த செங்கோட்டை போலீசார் சரவணனை மீட்டு நெல்லை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணை

    அங்கு சரவணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×