search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூரில் மனுநீதி நாள் முகாம்: 151 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்
    X

    முகாமில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.

    கடையநல்லூரில் மனுநீதி நாள் முகாம்: 151 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்

    • பளியர் இன மக்கள் வசிக்கும் கலைமான் நகரில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.
    • முகாமில் மொத்தம் 151 பயனாளிகளுக்கு ரூ.24.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணைக்கு செல்லும் வழியில் உள்ள பளியர் இன மக்கள் வசிக்கும் கலைமான் நகரில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.

    நலத்திட்ட உதவிகள்

    மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கடையநல்லூர் நகர் மன்றத்தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை கலெக்டர் ஷீலா, ஆர்.டி.ஓ. கங்காதேவி, தாசில்தார் சண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பேசியதாவது:-

    தென்காசி மாவட்டத்தை பொறுத்த வரை கடைக்கோடி மக்களுக்கும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதற்கென ஒவ்வொரு மாதமும் மனுநீதி நாள் முகாம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன்மூலம் அந்தந்த கிராம மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு அவை மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என பரிசீலனை செய்து மனுநீதி நாள் அன்று தகுதி வாய்ந்த மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் இந்த முகாமில் மொத்தம் 151 பயனாளிகளுக்கு ரூ.24.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முகாமில் ஒன்றிய கவுன்சிலர் அருணாசல பாண்டியன், நகர்மன்ற கவுன்சிலர் முருகன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மீரான் உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×