என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலியாக வாகன நிறுத்தம் 'டோக்கன்' கொடுத்து கட்டாய பணம் வசூல்- கோவில் நிர்வாகத்தினர் போலீசில் புகார்
- பெரும்பாலான பக்தர்கள் பஸ், கார், வேன், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் வருவது வழக்கம்.
- கோவில் நிர்வாகம் கட்டணம் இல்லாமல் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கு கோவில் வளாகத்தில் இடம் ஒதுக்கி உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த புட்லுார் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் இந்து அறநிலைதுறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிப்பட்டு செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் பஸ், கார், வேன், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் வருவது வழக்கம்.
கோவில் நிர்வாகம் கட்டணம் இல்லாமல் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கு கோவில் வளாகத்தில் இடம் ஒதுக்கி உள்ளது.
ஆனால் கடந்த சில மாதங்களாக கோவில் வளாகத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சிலர் போலியாக டிக்கெட் கொடுத்து கட்டாய பண வசூலில் ஈடுபட்டு உள்ளனர். கார், வேன் போன்ற வாகனங்களுக்கு ரூ.50, பஸ் ரூ.100 என கட்டணம் வசூலிக்கின்றனர்.
இது குறித்து பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கோவில் செயல் அலுவலர் சரவணன் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதில் கோவில் வளாகத்தில் நிறுத்தப்படும் வாகனங் களுக்கு தனிநபர் கட்டாய கட்டண வசூல் செய்கின்றனர்.
மேலும் கோவில் வளாகத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு டிக்கெட் கட்டணம் எதுவும் கிடையாது இலவசம் என்ற அறிவிப்பு பலகை வைத்திருந்தோம். இந்த அறிவிப்பு பலகையையும் தனிநபர் சேதப்படுத்தியுள்ளார்.
எனவே பொதுமக்களிடம் கட்டாய வசூலில் ஈடுபடும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.






