search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
    X

    சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

    • அவினாசி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பவர் லோகநாதன்.
    • சப் இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    அவினாசி :

    அவினாசி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பவர் லோகநாதன். இவர் நேற்று அவினாசி மங்கலம் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே மோட்டர் சைக்கிளில் வேகமாக வந்த நபரை தடுத்து நிறுத்தி சப் இன்ஸ்பெக்டர் லோகநாதன் அவரிடம் ஆவணங்களை கேட்டுள்ளார். அப்போது அந்த நபர் சப் இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே குடிபோதையில் இருந்த அவரை போலீஸ் நிலையம் கொண்டுவந்து விசாரித்ததில் அவர் அவினாசி வள்ளுவர் வீதியை சேர்ந்த செல்லப்பன் மகன் பிரகாஷ் (வயது 38) என்பதும் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×