என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நத்தம் அருகே அரிவாள் வெட்டில் காயம் அடைந்தவர் உயிரிழப்பு -கொலை வழக்காக மாற்றம்
- மர்ம நபர் தூங்கி கொண்டிருந்த விவசாயியை சராமரியாக அரிவாளால் வெட்டினார்.
- சிகிச்சை பெற்று வந்த விவசாயி உயிரிழந்ததால் கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள எல். வலையபட்டியை சேர்ந்தவர் சின்னையா (வயது45). விவசாயி. இவர் கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டிற்கு வெளியில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வந்த மர்ம நபர் தூங்கி கொண்டிருந்த சின்னை யாவை சராமரியாக அரிவாளால் வெட்டினார். இதில் அவருக்கு குடல் சரிந்து கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்ட அவர் மேல் சிகிச்சை க்காக மதுரை அரசுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த சின்னையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து நத்தம் போலீசார் அரிவாளால் வெட்டிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்ற னர். இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்