search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே கடையில் லாட்டரி  விற்றவர் கைது
    X

    பாவூர்சத்திரம் அருகே கடையில் லாட்டரி விற்றவர் கைது

    • கீழப்பாவூர் பகுதியில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பலசரக்கு கடை நடத்தி வந்த ஜோசப் என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றதா? என பாவூர்சத்திரம் போலீசார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கீழப்பாவூர் பகுதியில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது கீழப்பாவூர் பால்பண்ணை தெருவில் பலசரக்கு கடை நடத்தி வந்த குறும்பலாபேரி பூபாலசமுத்திரம் தெருவை சேர்ந்த ஜோசப் (வயது 73) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அவரிடம் இருந்து ரூ. 35 ஆயிரம் மதிப்பிலான 874 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×