என் மலர்
உள்ளூர் செய்திகள்

புது ஆற்றில் கரை ஒதுங்கிய ஆண் உடல்.
தஞ்சை புது ஆற்றில் கரை ஒதுங்கிய ஆண் உடல்
- 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது.
- கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் சுற்றுலா மாளிகை அருகே ஓடும் புது ஆற்றங்கரையோரம் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது.
இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெ க்டர் சுதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஆனால் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
இதையடுத்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆற்றில் குதித்து அந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா? தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






