என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூலை அனுமார் கோவிலில் நாளை மகாளய அமாவாசை வழிபாடு
- தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது.
- 1008 எலுமிச்சை பழங்களான மாலை சாற்றி தீபாராதனை நடக்கிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவிலில் ஒன்றாகத் திகழ்கிறது.
மூலை அனுமார் வாலில் சனீஸ்வர பகவான் உட்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.
இங்கு பிரதி அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
இந்த வருடம் மகாளய அமாவாசை சனிக்கிழமை வருவதால் அன்றைய தினம் மூலை அனுமாரை தரிசனம் செய்தால் வாழ்வில் ஏற்றத்தை பெறலாம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் நாளை ( சனிக்கிழமை ) மகளாய அமாவாசையை முன்னிட்டு காலை7.30 இலட்சம் ராம நாமம் ஜெபமும் அதனை தொடர்ந்து மூலை அனுமாருக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு பாலாபிஷேகம் , அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.
மாலை 6 மணிக்கு மூலை அனுமாருக்குபழங்களான சிறப்பு அலங்காரம் நடக்கிறது.
இதையடுத்து அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் நிகழ்ச்சியும் அதையடுத்து 1008 எலுமிச்சை பழங்களான மாலை சாற்றி தீபாராதனை நடக்கிறது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே ,உதவி ஆணையர் கவிதா,கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அமாவாசை கைங்கர்யம் குழுவினர் செய்து வருகின்றனர்.






