என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நடைபாதையை ஆக்கிரமித்து செயல்படும் கடைகள் அகற்றப்படுமா?
- நடைபாதையை ஆக்கிரமித்து செயல்படும் கடைகள் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலைகளில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.
மதுரை
மதுரையில் முக்கிய சாலை ஓரங்களில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்து ஓட்டல், பழக்கடை உள்ளிட்ட பல்வேறு வியாபாரங்கள் செய்து வருகின்றனர்.
மதுரை ரெயில் நிலையம் முதல் பெரியார் பஸ் நிலையம் வரை சாலையோர நடைபாதையில் பல்வேறு கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அந்த பாதையை பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன்படுத்த முடியவில்ைல.
இதன் காரணமாக மக்கள் நடைபாதையில் செல்ல முடியாத நிலை ஏற்படுவதால் வாகனங்கள் வரும் சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. அப்போது வேகமாக வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.இந்த சாலையோர கடைகள் பொதுமக்களுக்கு பெரும் இடையூராக இருந்தபோதிலும் அதனை அகற்ற மாநகராட்சியோ, போக்குவரத்து போலீசாரோ, நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதன் எதிரொலியாக நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலைகளில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.
எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்படுவதை தடுத்து மக்கள் நடைபாதையை பயன்படுத்த உதவி புரிய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக உடனடியாக எடுக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்