search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் காளைக்கு அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்
    X

    காளைக்கு அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்.

    கோவில் காளைக்கு அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்

    • கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
    • காளையை ஊர்வலமாக எடுத்து சென்று இன்று மாலை நல்லடக்கம் செய்ய உள்ளனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் காளை இருந்து வந்தது. உடல்நல குறைவால் அந்த காளை இன்று காலை இறந்தது.

    இந்த காளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக் கட்டுகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி தங்கம், வெள்ளி நாணயம், அண்டா, சைக்கிள், பீரோ உள்ளிட்ட பல பரிசுகள் பெற்றுள்ளது குறிப்பி டத்தக்கது. இந்த காளை ஊருக்குள் சுற்றும் போது செல்ல பிள்ளை யாகவும், வாடி வாசலில் சீறிப்பாயும் போது வீரனாகவும் மாறி ஊருக்கு பெருமை சேர்த்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக உடல்நல குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அந்த காளை இறந்துவிட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பலரும் வருகை தந்து காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஊர் மந்தையில் காளையை நிறுத்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    பெண்கள் உள்பட ஒட்டு மொத்த கிராமமே ஒன்று திரண்டு கண்ணீர் மல்க காளையை ஊர்வலமாக எடுத்து சென்று இன்று மாலை நல்லடக்கம் செய்ய உள்ளனர்.

    Next Story
    ×