search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோழவந்தான் பகுதியில் கிராம சபை கூட்டம்
    X

    சோழவந்தான் பகுதியில் கிராம சபை கூட்டம்

    • சோழவந்தான் பகுதியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • சி.புதூர், சித்தாலங்குடி, திருவேடகம், இரும்பாடி, நாச்சிகுளம், கருப்பட்டி, ரிஷபம், நெடுங்குளம், திருவேடகம் ஆகிய ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மன்னாடிமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. வெங்க டேசன் எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார். கிராம மக்கள் குடிநீர், ரோடு, கழிவறை, பஸ் வசதிகள் உட்பட கிராம மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இதில் மாவட்ட வழங்கல் அதிகாரி முருகவள்ளி, தாசில்தார் மூர்த்தி, மண்டல துணை தாசில்தார் வருவாய் அலுவலர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர் வெங்க டேசன், அரசு போக்கு வரத்துக் கழக என்ஜினீயர் மூர்த்தி, வனத்துறை, சுகா தாரத்துறை, கல்வித்துறை உள்பட பல்வேறு துறை யைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ஊராட்சி தலைவர் பவுன் முருகன், ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீர பாண்டி, துணைத் தலைவர் பாக்கியமெ் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர் கதிரவன், ஊராட்சி செயலாளர் திருச்செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் காடுபட்டி ஊராட்சியில் தலைவர் ஆனந்தன், முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் தலைவர் பழனிவேல், துணைத் தலைவர் கேபிள் ராஜா, தென்கரை ஊராட்சியில் தலைவர் மஞ்சுளா அய்யப்பன், துணைத் தலைவர் கிருஷ்ணன், திருவாலவாயநல்லூர் ஊராட்சியில் தலைவர் சகுபர்சாதிக், மேலக்கால் ஊராட்சியில் தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன், துணைத் தலைவர் சித்தா ண்டி ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடந்தன. சி.புதூர், சித்தாலங்குடி, திருவேடகம், இரும்பாடி, நாச்சிகுளம், கருப்பட்டி, ரிஷபம், நெடுங்குளம், திருவேடகம் ஆகிய ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.

    Next Story
    ×