search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் பக்தரிடம் 18 பவுன் நகை திருட்டு
    X

    பெண் பக்தரிடம் 18 பவுன் நகை திருட்டு

    • திருப்பரங்குன்றம் கோவிலில் பெண் பக்தரிடம் 18 பவுன் நகை திருட்டு போனது.
    • வழிபாடு செய்து விட்டு மீண்டும் திரும்பியபோது நகை காணாமல் போனது.

    திருப்பரங்குன்றம்

    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், விஜய் நகரை சேர்ந்த நடராஜபிரபு மனைவி சரண்யா (வயது 32). சம்பவத்தன்று காலை இவர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்தார்.

    அங்குள்ள பொருட்கள் வைப்பறையில், 18 பவுன் நகையுடன் கைப்பையை வைத்து விட்டு கோவிலுக்குள் சென்றார். வழிபாடு செய்து விட்டு மீண்டும் திரும்பி வந்தார். வைப்பறையில் இருந்த கைப்பையை பரிசோதித்து பார்த்தார். அதில் 18 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரிய வந்தது.

    இது குறித்து சரண்யா திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×