search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாத்தா வீட்டில் தங்கியிருந்த இளம்பெண் திடீர் மாயம்
    X

    தாத்தா வீட்டில் தங்கியிருந்த இளம்பெண் திடீர் மாயம்

    • மதுரை அருகே தாத்தா வீட்டில் தங்கியிருந்த இளம்பெண் திடீர் மாயமாயானார்.
    • பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அந்த பெண் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் நந்திரெட்டிபட்டி கிரா–மத்தை சேர்ந்தவர் கோபி–ராஜ் மகள் மலர் (வயது 19). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மகள் மலரை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிந்து–பட்டி போலீஸ் சரகத் திற்கு உட்பட்ட நக்கலக் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அழகுமலை (62) வீட்டில் தங்க வைத்திருந்தார்.

    கடந்த 4 மாதங்களாக மலர் அங்கு தங்கியிருந்தார். இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் மலர் குறித்த எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவரது தாத்தா கொடுத்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீ–சார் வழக்குப்பதிவு செய்து மாயமான மலர், தானாகவே எங்கேனும் சென்றாரா அல்லது யாராவது மர்ம நபர்களால் கடத்தப்பட்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசா–ரணை மேற்கொண்டு வருகி–றார்கள்.

    Next Story
    ×