search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முளைக்கொட்டு திருவிழா தொடங்கியது
    X

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மன் பல்லக்கில் எழுந்தருளினார். (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்)

    முளைக்கொட்டு திருவிழா தொடங்கியது

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முளைக்கொட்டு திருவிழா தொடங்கியது.
    • விழா ஏற்பாடு–களை கோவில் இணை கமி–ஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியா ளர்கள் செய்து வருகின்றனர்.

    மதுரை

    ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர் வாக்கின்படி விவசாயப் பெருமக்கள் ஆடி மாதத்தில் விதை விதைத்து நாற்று நட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்வர். அவர்கள் தங்கள் விளை நிலங்களில் பயிர்கள் அமோக விளைச் சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.

    உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் விவசாயம் வளம் பெறவும், நாடு செழிக்க வேண்டியும் மீனாட்சி அம்ம–னுக்கு மட்டும் ஆடி முளைக் கொட்டுத் திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவ–ராத்திரி விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகியவை நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டுத் திருவிழா இன்று (20-ந்தேதி, வியாழக் கிழமை) தொடங்கி வருகிற 29-ந்தேதி வரை நடைபெறு–கிறது.

    விழாவின் தொடக்கமாக இன்று காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடி–யேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி இன்று முதல் விழா திருவிழா நடைபெறும் 10 நாட்கள் மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    விழாவின் 3-ம் நாளான நாளை மறுநாள் (22-ந்தேதி) ஆடிப்பூரத்தன்று மூலஸ்தா–னம், உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு உச்சிகால பூஜையில் ஏற்றி, இறக்குதல் வைபவம் நடக்கிறது. 23-ந்தேதி வெள்ளி சிம்மாசனத் திலும், 24-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், 25-ந்தேதி கிளி வாகனத்திலும், 26-ந்தேதி புஷ்ப பல்லக்கி–லும் வீதியுலா நடைபெறும்.

    7-ம் நாளான 26-ந்தேதி இரவு வீதிஉலா முடிந்த பின் உற்சவர் சந்நதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவமும் நடைபெறும். 27-ந்தேதி தங்க குதிரை வாகனத்திலும், 29-ந்தேதி புஷ்ப வாகனத்தி லும், 10-வது நாள் நிறைவு நாளான 29-ந்தேதி கனக தண்டியலில் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். விழா விற்கான ஏற்பாடு–களை கோவில் இணை கமி–ஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியா ளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×