என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விபத்தில் டிரைவர்-வாலிபர் பலி
- விருதுநகர் அருகே நடந்த விபத்தில் டிரைவர், வாலிபர் பலியானார்கள்.
- கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காளையார் குறிச்சி மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச் சாமி (வயது63), டிரைவர். இவர் சரக்கு வேனில் நிலக்கோட்டையில் லோடு இறக்கிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். திருமங்கலம் மேலக்கோட்டை அருகே வந்தபோது வேனை நான்கு வழிச்சாலையின் சாலையில் ஓரமாக நிறுத்திவிட்டு எதிர்புறம் இருந்த ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். சாப்பிட்டு முடித்து விட்டு நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் ஒரு வடமாநில தொழிலாளி வந்து கொண்டிருந்தா. எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் வெள்ளைச்சாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெள்ளைச்சாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் வடமாநில தொழி லாளியும் காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். தகவலறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெள்ளைச்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சுவாமி மல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி(45), இவர் சிவரக்கோட்டை நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தார். பின்னர் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது விருதுநகரில் இருந்து திருமங்கலம் நோக்கி கொண்டிருந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால் செல்லும் வழியிலேயே மலைச்சாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்