என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் மாயம்
- மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த வாலிபர் மாயமானார்.
- சந்தனராஜ் தனது மகனை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
மதுரை
மதுரை ஆரப்பாளையம் மேலப்பொன்னகரம் 8-வது தெருவை சேர்ந்தவர் சந்தனராஜ். இவரது மகன் கார்த்திகேயன்(வயது24). இவர் போதை பழக்கத்திற்கு அடிமையானதால் ஒத்தக்கடையில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்.
அதன்பின் சந்தனராஜ் தனது மகனை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த கார்த்திகேயன் வெளியே செல்லவாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






