search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலி
    X

    கண்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலி

    • கண்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலியானார்.
    • கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பலமாக மோதியது.

    திருமங்கலம்

    திருவள்ளூர் மாவட்டம் புத்தாகரம் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் ஈஸ்வரன் (வயது24). இவர் நெல்லையில் உள்ள தனது நண்பரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் குதிரைசாரிகுளம் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக ஈஸ்வரனின் தாய் மாரியம்மாள் திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×