search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரு மணி நேரம் யோகா செய்து மாணவர்கள் சாதனை
    X

    ஒரு மணி நேரம் யோகா செய்து மாணவர்கள் சாதனை

    • ஒரு மணி நேரம் யோகா செய்து மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மேலூர்

    மேலூர் நாடார் திருமண மண்டபத்தில் ஸ்ரீ சாய் பிரம்மரந்த யோகாலயம் மற்றும் புதிய சோழன் அமைப்பு சார்பில் உடலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் யோகா பயிலும் மாணவ-மாணவிகள் ஒன்றாக இணைந்து ஒரு மணி நேரம் இடைவிடாமல் ஆனந்த பத்மாசனம் யோகா செய்து சாதனை படைத்தனர்.இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் தலைவர் ராஜா மகேந்திரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சிவயோகி சிவசண்முகம் குருஜி மற்றும் மேலூர் டாக்டர் சூர்ய பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நடுவர்களாக சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் நீலமேகம் நிமலன், பொதுச்செயலாளர் ஆர்த்திகா நிமலன், தென் மண்டல தலைவர் சுந்தர், மண்டல தலைவர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ரீ சாய் பிரம்மரந்த யோகாலயத்தின் ஒருங்கிணைப்பாளர் சரவண பாண்டியன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.

    இதில் 50 மாணவர்கள் பங்கேற்றனர். சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

    Next Story
    ×