search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-பா.ஜனதா
    X

    ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-பா.ஜனதா

    • ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.
    • இதில் மத்திய அரசு கவனம் செலுத்தி ஜல்லிகட்டு தடைபடாமல் தொடர்ந்து நடைபெற வழிவகை செய்ய வேண்டும்.

    வாடிப்பட்டி

    பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராமசீனிவாசன் டெல்லியில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.அதில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மனநிலையில் செயல்படுகிறது. தமிழகத்தில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு விசாரனைக்கு வர உள்ளது. இந்த வழக்கை தமிழக அரசு சரிவர கையாளவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் ஜல்லிகட்டுக்கு தடை விதிக்கப்படலாம். இதில் மத்திய அரசு கவனம் செலுத்தி ஜல்லிகட்டு தடைபடாமல் தொடர்ந்து நடைபெற வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அப்போது கே.ஆர்.முரளி ராமசாமி, மாணிக்கம், நடராஜன், சிவகுருநாதன் ஆகியோர் உடனிருந்தனர். அதன்பின் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்த தகவல் தொழில் நுட்ப பிரிவு பயிற்சி கருத்தரங்கில் பங்கேற்ற தேசிய தலைவர் நட்டா, பேராசியர் ராமசீனிவாசனை திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியதற்காக வாழ்த்து தெரிவித்தார்.

    Next Story
    ×