search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

    • மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை வருவாய் கோட்டாட்சியரின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை
    (6-ந்தேதி) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

    இதில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள், 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி, போன்ற உதவி உபகரணங்கள், மாதாந்திர உதவித்தொகை மற்றும் இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு உதவிகள் பெறும் வகையில் விண்ணப்பங்கள் வழங்கலாம்.

    இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் மதுரை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட மதுரை மேற்கு வட்டம், வடக்கு வட்டம் மற்றும் வாடிப்பட்டி வருவாய் வட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத் திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவ அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போட் புகைப்படம்-1 ஆகியவற்றுடன் மதுரை வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் வழங்கி பயனடையலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×