search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 பேருக்கு அரிவாள் வெட்டு
    X

    2 பேருக்கு அரிவாள் வெட்டு

    • மதுரை அருகே 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி, கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    கோச்சடையை சேர்ந்தவர் குமார் தேவரகொண்டா (வயது43). இவர் சம்பவத்தன்று நள்ளிரவு, டோக் நகரில் நடந்து வந்தார். அப்போது குப்பைத்தொட்டி அருகே பதுங்கி இருந்த 2 பேர், சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்ன அனுப்பானடி, சிவஞானம் தெருவை சேர்ந்தவர் ராஜா ஸ்ரீதர். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தார். அப்போது ஒரு கும்பல் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது. இது தொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த பப்லு என்ற பாலமுருகன் மற்றும் நந்தி உள்பட சிலர் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×