search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை ஐகோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக ரூ.4 லட்சம் மோசடி
    X

    மதுரை ஐகோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக ரூ.4 லட்சம் மோசடி

    • மதுரை ஐகோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக ரூ.4 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
    • இந்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அனுப்பானடி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரது மனைவி தாமரைச்செல்வி. இவர் தெப்பக்குளம் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2021-ம் ஆண்டு தெப்பக்குளத்தை சேர்ந்த வெற்றிச்செல்வம், அவரது மனைவி கவுரி ஆகியோர் அறிமுகமானார்கள். அப்போது ஐகோர்ட்டில் அதிகாரிகள் பலரை எங்களுக்கு தெரியும். நீங்கள் குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்தால் ஐகோர்ட்டில் உறுதியாக வேலை வாங்கி விடலாம் என ஆசை வார்த்தை கூறினர்.

    இதை நம்பி நான் மற்றும் எனக்கு தெரிந்த உறவினர் தனலட்சுமி ஆகியோர் ரூ.4 லட்சம் ரூபாய் வரை கொடுத்தோம். பணத்தை பெற்றுக்கொண்ட தம்பதியினர் பணி நியமன ஆணையை எங்களிடம் கொடுத்தனர்.

    அதை கோர்ட்டு அலுவலகத்தில் சென்று காண்பித்தபோது, பணி ஆணை போலியானது என தெரியவந்தது. இதையடுத்து ரூ.4 லட்சத்தை திருப்பித்தருமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் பணத்தை தர மறுக்கின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப்படையில் தெப்பக்குளம் போலீசார், கணவன்-மனைவியிடம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை கே.கே.நகரை சேர்ந்தவர் ராஜன். கிரானைட் நிறுவனம் நடத்தி வரும் இவர், அண்ணாநகர் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த சூரகண்டி மனைவி வனிதா எங்கள் நிறுவனத்திற்கு வந்தார். அவர் கட்டுமானத்திற்காக கடன் அடிப்படையில் கிரானைட் கற்களை வாங்கிச்சென்றார். இதற்காக அவர் ரூ.20 லட்சம் தர வேண்டியுள்ளது. ஆனால் அவர் தற்போது வரை பணம் தராமல் இழுத்தடித்து வருகிறார்.

    எனவே வனிதா மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×