என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிரதமர் மோடி அரசின் திட்டங்களால் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றி பெறும்
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி அரசின் திட்டங்களால் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றி பெறும்.
- மதுரையில் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் பேட்டியளித்தார்.
மதுரை
மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சி மாநகர்மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் மாவட்ட பொதுச்செய லாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு மேற்பார்வை யாளருமான சுதாகர் ரெட்டி கலந்து கொண்டு வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினார்
அதன் பின்பு அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் சாதனை களை கிராமங்கள் தோறும் கொண்டு சேர்க்கின்ற முயற்சியில் ஈடுபட் டுள்ளோம். பிரதமர் மோடியின் முயற்சியால் உலகம் முழுவதும் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் மிகவும் பின்தங்கி இருந்த அனைத்து துறைகளும் பிரதமர் மோடி ஆட்சியில் பொருளாதார ரீதியாக உலக அளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்கா முதல் பல்வேறு உலக நாடுகள் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை பாராட்டியுள்ளன. 'இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக மக்கள் மனதில் பா.ஜ.க. அரசு உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது.
மத்திய அரசின் நலத்திட்டங்களால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அரசு மிக பெரிய அளவில் வெற்றி பெறும். தமிழகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கடும் உழைப்பின் காரணமாக பா.ஜ.க. அசுர வளர்ச்சியடைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு பிரிவு செயலாளர் பாஸ்கர், மண்டல் தலைவர் மாணிக்கம், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன்,ஊடகப் பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்