search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் நாளை மின்தடை
    X

    மதுரையில் நாளை மின்தடை

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    மதுரை

    மதுரை அரசரடி மற்றும் பசுமலை துணை மின் நிலையத்தில் உள்ள தொழிற்பேட்டை, பெருங்குடி உயர் அழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (8-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    சொக்கலிங்க நகர் 1 முதல் 9-வது தெருக்கள், டி.எஸ்.பி. நகர், பொன்மேனி மெயின் ரோடு, எஸ்.எஸ்.காலனி வடக்குவாசல், பிள்ளையார் கோவில் தெரு, பொன்மேனி நாராயணன் தெரு, ஜானகி நாராயணன் தெரு, அருணாசலம் தெரு, திருவள்ளுவர் தெரு, வாழ்மீகி தெரு, சோலைமலை தியேட்டர் பின்புறம், மீனாட்சி நகர் 1 மற்றும் 2-வது தெருக்கள், ராமையா தெரு, பொன்பாண்டி தெரு, பொன்மேனி குடியானவர் கிழக்கு தெரு, குமரன் தெரு, ஜவகர் மெயின் ரோடு 1 முதல் 5 தெருக்கள், கண்ணதாசன் தெரு, சுப்பிரமணியர் தெரு, நாவலர் 1 முதல் 3-வது தெருக்கள், பை-பாஸ் ரோடு, பாரதியார் மெயின் ரோடு 1 மற்றும் 2-வது தெருக்கள்.

    பெருங்குடி ஆர்.எம்.எஸ் காலனி, புதுக்குளம் 2 பிட், ஜென்னட் நகர், அவனியாபுரம் மெயின் ரோடு, முத்துப்பட்டி, பெருமாள் நகர், கோல்டன் சிட்டி, இந்தியன் நகர், சிவகாமியம்மன் நகர், பைக்காரா, அழகுசுந்தரம் நகர், பாலநாகம்மாள் கோவில் தெரு, மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை மேற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×