என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்
- ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
- மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
மதுரை
மதுரை மாவட்டத்தை சேர்ந்த அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம், சென்னை ஓய்வூதிய இயக்குநரால் மதுரை மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள்குறை தீர்க்கும் கூட்டரங்கில் வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடத்தப்பட உள்ளது.
ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் உள்ள குறைகளை குறிப்பிட்டு, கலெக்டருக்கு கீழ்கண்ட விபர குறிப்புகளுடன் வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
மனுவின் மீது ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மனு என்று குறிப்பிட வேண்டும். விண்ணப்பம் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் கண்டிப்பாக இரு நகல்கள் அனுப்பப்பட வேண்டும். ஓய்வூதியர் பெயர் (குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தால் உறவுமுறை) குறிப்பிடப்பட வேண்டும்.
ஏற்கனவே ஓய்வூதியம் பெற்று வந்தால் அவை சம்பந்தமான விபரம், ஓய்வூதிய புத்தக எண் மற்றும் கருவூலத்தின் பெயர் ஆகியவை குறிப்பிட வேண்டும். ஓய்வூதியப் பிரேரணை சென்னை மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டிருந்தால் அதன் விபரம் குறிப்பிட வேண்டும். ஓய்வூதிய பலன்கள் பெறுவது தொடர்பான கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து விண்ணப்பிக்கவும், கோரிக்கையின் விபரம் தெளிவாக குறிப்பிட வேண்டும். ஓய்வூதியதாரர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய அலுவலர் மற்றும் அலுவலகத்தின் முழு முகவரி, தொலைபேசி எண்ணுடன் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். பிற மாவட்டங்களை சேர்ந்த அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் ஓய்வூதியர் குறை தீாக்கும் நாள் கூட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அரசு துறைகளில் இருந்து ஓய்வூதியப் பிரேரணை அனுப்புவதில் ஏற்படும் தாமதம் மற்றும் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் விவாதித்து குறைகளை களைய விரைந்து நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில் மதுரை மாவட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பதிலளிக்க உள்ளனர்.
எனவே 30-ந்தேதி நடைபெற உள்ள ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு 15-ந்தேதிக்குள் மனு செய்துள்ள ஓய்வூதியதாரர்கள், அன்றைய தினம் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட செய்தி- மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்