search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமங்கலத்தில் நாளை அமைதி பேரணி
    X

    செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் 

    திருமங்கலத்தில் நாளை அமைதி பேரணி

    • திருமங்கலத்தில் நாளை அமைதி பேரணி நடக்கிறது.
    • கலைஞரின் 4-ந் ஆண்டு நினைவுதினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.

    மதுரை

    மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகம் போற்றும் உத்தம தலைவர், தமிழர்களின் ஒப்பற்ற தலைவர், செம்மொழி கண்ட நாயகர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் 4-ந் ஆண்டு நினைவுதினம் வருகிற 7-ந் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.

    இதையொட்டி மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து மாபெரும் அமைதிப் பேரணி புறப்பட்டு, திருமங்கலத்தில் உள்ள தி.மு.க. அலுவலகம் சென்றடைந்து அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.

    கருணாநிதி நினைவே ந்தலை போற்றும் இந்த நிகழ்ச்சிகளில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னோடிகள், ஊராட்சி செயலாளர்கள், தொண்டர்கள் திரளானோர் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×