search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்திரகாளி அம்மன் கோவில் பொங்கல் விழா
    X

    பத்திரகாளி அம்மன் கோவில் பொங்கல் விழா

    • சோழவந்தான் அருகே பத்திரகாளி அம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யப்ப நாயக்கன்பட்டி பத்திர காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 5-ந் தேதி காப்பு கட்டு வைபவமும், 21-ந் தேதி இரவு சக்தி கரகம் மற்றும் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும், 22-ந் தேதி வைகையாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று 250-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். அவர்களுக்கு ஊராட்சி கவுன்சிலர் செல்வராணி கந்தசாமி சில்வர் வாளி, சட்டிகளை பரிசாக வழங்கினார். மாலையில் முளைப்பாரியை வைகையாற்றில் கரைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×