search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனாட்சி அம்மன் கோவில்: தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்
    X

    மீனாட்சி அம்மன் கோவில்: தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்

    • மீனாட்சி அம்மன் கோவிலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் கோரிக்கை வைத்தனர்.
    • இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    மதுரை

    மதுரை பா.ஜ.க. பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் நிர்வாகிகள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது கலெக்டர். அனீஷ்சேகரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 15 வருடங்களுக்கு முன்பு கோவில் கோபுரங்களில் விரிசல் ஏற்பட்டது. தொல்லியல் துறை பரிந்துரைப்படி கனரக வாகனங்கள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. கோவில் கோபுரத்தை சுற்றி இருந்த காவல் ஆணையர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன.

    கோபுரத்தை சுற்றி 9 மீட்டர் உயரத்துக்கு கூடுதலாக கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் கட்டிட உரிமையாளர்கள் பூமிக்கு அடியில் பல மீட்டர் ஆழத்திற்கு பள்ளம் தோண்டி கட்டிடங்களை கட்டி வருகின்றனர். இதனால் கோவில் கோபுரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    கட்டிடங்களை உயர்த்து வதால், பிரகாரத்துக்குள் மழை நீர் தேங்கி, கோவிலின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால் கோவில் பொலிவை இழந்து வருகிறது. கோவிலுக்குள் வாடகை கடைகள் தற்போது அகற்றப்பட்டு உள்ளன.

    ஆனால் தமிழக அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்து அறநிலைய துறையின் கீழ் உள்ள கோவில் சொத்துகளை குத்தகைக்கு விட புதிய உத்திரவு பிறப்பித்து உள்ளார். இதன் மூலம் அரசியல் செல்வாக்கு உள்ள வேறு நபர்களுக்கு கோவில் இடத்தை பல ஆண்டுகளுக்கு குத்தகை விட முயற்சிகள் நடக்கிறது.

    கோவிலுக்குள் பலத்த பாதுகாப்பு இருந்தும் தீ விபத்து ஏற்பட்டு தூண்கள், மண்டபங்கள் இடிந்து சேதம் அடைந்தது. எனவே மீனாட்சி அம்மன் கோவிலின் பழமையை பேணி காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொல்லி யல் துறை அறிவுறுத்தியது. அங்குள்ள சேதம் அடைந்த மண்டபம், தூண்கள் இதுவரை சீரமைக்கப்பட வில்லை.

    உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் பழமை, பொலிவை பேணி காக்கும் வகையில், அதனை மத்திய அரசின் தொல்லியல் துறை வசம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிபா.ஜ.க.வித்தார்.

    Next Story
    ×