என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காரை திருடிய மெக்கானிக் கைது
- கம்ப்யூட்டர் என்ஜினீயரின் காரை திருடிய மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.
- திருடுபோன அந்த காரில் ஜி.பி.எஸ் கருவிகள் இருந்தது.
மதுரை
மதுரை சின்ன சொக்கிகுளத்தைச் சேர்ந்த லோகநாதன் (33) என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காரை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தார்.
இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மதுரை வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. லோகநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அவர் கூறுகையில், நான் பெங்களூருவில் கம்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறேன். சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு வந்தேன். மதுபான கடைக்குச் சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்தினேன். அதன் பிறகு காரை வீட்டின் முன்பாக நிறுத்தி விட்டு, அங்கு படுத்து தூங்கினேன். அங்கு வந்த வாலிபர் என்னை கீழே தள்ளி விட்டு காரை கடத்திச் சென்று விட்டார் என்று தெரிவித்து உள்ளார்.
திருடுபோன அந்த காரில் ஜி.பி.எஸ் கருவிகள் இருந்தது. போலீசார் தொழில்நுட்ப உதவியுடன் தேடிப் பார்த்தனர். அந்த கார், ஒத்தக்கடை நோக்கி செல்வது தெரியவந்தது. போலீசார் ஜீப்பில் விரட்டி சென்று காரை மடக்கிப்பிடித்தனர்.
காரில் இருந்த வாலிபரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு கூட்டிச்சென்று விசாரித்தனர். அவர் ஒத்தக்கடையை சேர்ந்த ரமேஷ்(30), கார் மெக்கானிக் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்