search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடோனில் இரும்பு பொருட்களை திருடி எடைக்கு போட்டவர் கைது
    X

    குடோனில் இரும்பு பொருட்களை திருடி எடைக்கு போட்டவர் கைது

    • குடோனில் இரும்பு பொருட்களை திருடி எடைக்கு போட்டவர் கைது செய்யப்பட்டார்.
    • அதன் மதிப்பு ரூ.60 ஆயிரமாகும்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் இரும்பு பொருட்கள் வைக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனில் திருவள்ளூரை சேர்ந்த பத்மநாபன் (வயது 55) என்பவர் தனக்கு சொந்த மான டிராக்டர் தொழிற்சா லைக்கு பயன்படுத்தும் இரும்பு டிஸ்க் பொருட்களை வைத்திருந்தார்.

    அந்த குடோனுக்கு மேலாளர் கணேசன் ஆய்வு செய்தபோது, இரும்பு பொருட்கள் திருடப்பட்டி ருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு

    ரூ.60 ஆயிரமாகும். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    அந்த குடோனில் திருடிய பொருட்களை இரும்பு கடைகளில் சானாம் பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (35) என்பவர் எடைக்கு போட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×