என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது
    X

    இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது

    • இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இளம்பெண் மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை மேலூர் அருகே உள்ள கீழவளவு கக்கன் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது35). கூலி வேலை பார்த்து வரும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்தநிலையில் அவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் வாட்சாம் பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு தனது பகுதியை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தண்ணீர் பிடித்து கொண்டிருந்ததை பார்த்தார்.

    அவரிடம் தனியாக பேச வேண்டும் என கூறியுள்ளார். ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் சிவக்குமாருக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அந்த இளம்பெண் சிவக்குமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    அப்போது அவரை அங்குள்ள சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்று சிவக்குமார் கற்பழித்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த இளம்பெண் மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.தன்னை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று கற்பழித்ததாக அந்த இளம்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி சிவக்குமாரை கைது செய்தனர்.

    Next Story
    ×