search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

    மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம்

    • சோழவந்தான் அருகே மதுரை வீரன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஆதீனம், கிராமமக்கள் பங்கேற்றனர்.
    • விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சி கிராமத்தில் உள்ள பால கிருஷ்ணாபுரத்தில் வடகாட்டு பகுதியில் உள்ள மொம்மியம்மன், வெள்ளையம்மாள் சமேத மதுரை வீரன் சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    முத்திருளாண்டி பங்காளி களுக்கு பாத்தியப்பட்ட, மதுரைவீரன் சுவாமி கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை விக்னேஷ்வரர் பூஜையுடன் தொடங்கியது.

    பின்னர் அஷ்ட லட்சுமி பூஜை, பரிகார தெய்வங்களுக்கு பூஜை செய்து முதல் கால ஹோமம் நடந்தது. பின்னர் இரண்டாம் கால யாகபூஜையுடன் நிவர்த்தியாகி, ஸ்ரீமொம்மியம்மாள், வெள்ளையம்மாள் சமேத மதுரை வீரன் சுவாமி சிலைகள் சிறப்பு பூஜையுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அன்று மாலை மதுரை ஆதீனம் ஸ்ரீஸ்ரீஸ்ரீஞானசம்பந்த சுவாமிகள் கொண்டு யாகசாலை மற்றும் மதுரை வீரன் சுவாமிக்கு பூஜைகள் செய்து அனைவருக்கும் ஆசி வழங்கினார்.

    தொடர்ந்து நேற்று (ஞாயிறு) காலை 3 மற்றும் 4-ம் கால யாகபூஜை நிவர்த்தியாகி, புனிதநீர் அடங்கிய குடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வந்து கோபுர கலசங்களுக்கும், சுவாமிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது வானில் கருடன் வட்டமிட்டது .

    மேலும்நிகழ்ச்சியில் கருப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் தங்கபாண்டியன், இரும்பாடி ஊராட்சி தலைவர் ஈஸ்வரி பண்ணைச்செல்வம், கிராம பொதுமக்கள், மற்றும் முத்திருளாண்டி பங்காளிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×