search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி
    X

    மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி

    • மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்படும்.
    • இதற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அம்பிகா, சுமதி, ரேவதி ஆகியோர் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய பகுதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு திட்ட இயக்குனர் காளிதாசன் தலைமை தாங்கினார். முன்னோடி வங்கி மேலாளர் அணில் முன்னிலை வகித்தார். உதவி திட்ட அலுவலர் வெள்ளப்பாண்டி வரவேற்றார். இதில் ஊமச்சிகுளம் இந்தியன் வங்கி கிளை மேலாளர், பொதும்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் 62 குழுக்களுக்கு ரூ.3.46 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. 23 குழுக்களுக்கு ரூ.1 கோடி மதிப்பில் தர மதிப்பீடு செய்யப்பட்டது. முடிவில் உதவி திட்ட அலுவலர் மரியா மகதேவ் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அம்பிகா, சுமதி, ரேவதி ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×