search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எல்.ஐ.சி. ஊழியர்கள் மாநாடு
    X

    எல்.ஐ.சி. ஊழியர்கள் மாநாடு

    எல்.ஐ.சி. ஊழியர்கள் மாநாடு

    • மதுரையில் எல்.ஐ.சி. ஊழியர்கள் மாநாடு நடந்தது.
    • எல்.ஐ.சி. பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தின் 66வது ஆண்டு பொது மாநாடு மற்றும் பேரணி திருநகரில் நடந்தது. கோட்டத்தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். துணை மேயர் நாகராஜன் வரவேற்றார்.

    கவுன்சிலர் விஜயா பேரணியை தொடங்கி வைத்தார். மதுரை கோட்டத்தின் 6 மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் இருந்து எல்.ஐ.சி. ஊழியர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.

    அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தலைவர் வேணுகோபால், தென்மண்டல கூட்டமைப்பின் துணைத்தலைவர் சுவாமிநாதன், சங்கத்தலைவர்கள் முத்துக்குமாரசாமி, சந்திரசேகரன், நிர்மலா, ஜோசப் சுரேஷ்ராஜ்குமார், பாண்டியராஜன் ஆகியோர் பேசினர். எல்.ஐ.சி. பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

    பொதுச் செயலாளர் ரமேஷ் கண்ணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×