search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிடா முட்டு சண்டை
    X

    கிடா முட்டு சண்டை

    • சோழவந்தான் அருகே கிடா முட்டு சண்டை நடந்தது.
    • கமிட்டித் தலைவர் வீரசிங்கம் தலைமை தாங்கினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழாவையொட்டி இன்று கிடா முட்டு சண்டை நடந்தது. பல்வேறு கிராமங்களில் இருந்து கிடாக்கள் குவிந்தன.

    கமிட்டித் தலைவர் வீரசிங்கம் தலைமை தாங்கினார். முத்துப்பாண்டி, பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். அஜித், குண்டுமணி வரவேற்றனர். உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளருமான கதிரவன் தொடங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் ரெட்காசி, விக்கிரமங்கலம் ஊராட்சி மன்றதலைவர் கலியுக நாதன், ஆர்.கே.சாமி, இளைஞரணி விக்னேஷ் ஆகியோர் பேசினர். பவித்திரன் நன்றி கூறினார்.

    இந்த கிடா முட்டு சண்டையில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து இருந்து 85 கிடாக்கள் கலந்து கொண்டன. கிடாக்களுக்கு கமிட்டி சார்பில் பரிசு வழங்கப்பட்டது. டி.எஸ்.பி. நல்லு தலைமையில் 60 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×