search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திரதின சாதனை படக்காட்சி வாகனம்
    X

    ரெயில்மவே மேலாளர் தொடங்கி வைத்தார். 

    சுதந்திரதின சாதனை படக்காட்சி வாகனம்

    • மதுரை ரெயில் நிலையம் சார்பில் சுதந்திரதின சாதனை படக்காட்சி வாகனத்தை மேலாளர் தொடங்கி வைத்தார்.
    • மோட்டார் சைக்கிள் மற்றும் படக்காட்சி வாகன பேரணி ஆகஸ்ட் 14 அன்று டெல்லி சென்று சேர இருக்கிறது.

    மதுரை

    மதுரை ரெயில்வே கோட்டம் சார்பாக 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் பேரணி, சாதனை படக்காட்சி வாகன பேரணியை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில், 6 மோட்டார் சைக்கிள்களில் ௧௨ ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் விருதுநகர், செங்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், ராமேஸ்வரம், காரைக்குடி, திண்டுக்கல் வழியாக சென்னை செல்கின்றனர். மேலும், சென்னையில் இருந்து அனைத்து கோட்ட பாதுகாப்பு படை வீரர்களுடன் இணைந்து பேரணியாக புதுடெல்லி செல்ல இருக்கிறார்கள்.

    இந்த மோட்டார் சைக்கிள் பேரணியுடன் ஒரு பட காட்சி வாகனமும் செல்ல இருக்கிறது. ஆஸாதி கா அம்ரித் மஹோற்சவ நிகழ்ச்சி, இந்திய ரெயில்வே மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் சாதனைகள் ஆகியவை இந்த படக்காட்சி வாகனத்தின் மூலம் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

    மோட்டார் சைக்கிள் மற்றும் படக்காட்சி வாகன பேரணி ஆகஸ்ட் 14 அன்று டெல்லி சென்று சேர இருக்கிறது.

    Next Story
    ×