search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு
    X

    பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

    • மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
    • 400 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த மல்லிகை பூ இன்று 600 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது.

    மதுரை

    நாளை ஆடி பவுர்ணமி தினம் என்பதால் மதுரை பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை அதிகரித் துள்ளது. மல்லிகை பூ 600 ரூபாய்க்கு விற்பனையானது.

    மதுரை பூ மார்க்கெட்டில் கடந்த ஒரு வாரமாக மல்லிகை பூக்கள் வழக்கமாக 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. மற்ற பூக்களான பிச்சு, சம்பங்கி, செவ்வந்தி, பட்டன் ரோஸ் உள்ளிட்ட பூக்களின் விலையும் சராசரியாக 100 முதல் 200 வரை விற்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நாளை ஆடி பவுர்ணமி தினம் என்ப தாலும், இன்னும் 2 நாட்க ளில் ஆடி 18 வருவதாலும் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்க ளைத் தேடி பொது மக்கள் ஆர்வத்துடன் சென்று வாங்கி வருகிறார்கள்.

    இதன் காரணமாக மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் வணிக வளாகத்தில் பூக்களை வாங்க ெபாதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    இதன் காரணமாக அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. வழக்கமாக 400 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த மல்லிகை பூ இன்று 600 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. மேலும் சம்பங்கி 100 ரூபாய் அதிகரித்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிச்சிப்பூ 500 ரூபாய்க்கும், செவ்வந்தி, அரளி ஆகிய மலர்கள் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பட்டன் ரோஸ் இன்று 200 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.

    மற்ற பூக்களின் விலையும் சற்று அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து cள்ளனர். இன்னும் சில தினங்களில் ஆடி 18 வர இருப்பதால் பூக்களின் விலை இன்னும் சில நாட்க ளுக்கு தொடர்ந்து அதிக ரிக்கும் என்று வியா பாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×