search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு புகுந்து ரூ.1 லட்சம்  திருட்டு
    X

    வீடு புகுந்து ரூ.1 லட்சம் திருட்டு

    • மதுரை அருகே வீடு புகுந்து ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    • இது குறித்து சீனிவாசன் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    நாகமலை புதுக்கோட்டையை அடுத்த சின்னநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (52). இவர் அந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மூத்த சகோதரி மேலக்குயில்குடி, அசோக் நகரில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் வீட்டை பூட்டிவிட்டு, முதல் மாடியில் படுத்து தூங்கினார். மர்ம நபர்கள் முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்தை திருடி சென்று விட்டனர். இது குறித்து சீனிவாசன் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×