search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகன சோதனையில் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்
    X

    பிடிபட்ட வாலிபர்கள்

    வாகன சோதனையில் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்

    • வாகன சோதனையில் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள் போலி பதிவு எண் வாகனத்தை ஓட்டி சென்றபோது பிடிபட்டனர்.
    • இதுதொடர்பாக போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகர போக்கு வரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாஜுதீன் நேற்று நள்ளிரவு காளவாசல் பகுதியில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார்சைக்கிள் வந்தது. அதில் 2 வாலிபர்கள் இருந்தனர். மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி போலீசார் சைகை செய்தனர்.

    ஆனால் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றனர். இதனால் சந்தே கம் அடைந்த போலீசார் விரட்டிச் சென்று 2 பேரை யும் சுற்றி வளைத்து பிடித்த னர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை யில் அவர்கள் மதுைர ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த சஞ்சய், கோவையை சேர்ந்த கவுரிசங்கர் என்பதும், அவர்கள் வந்த வாகனத்தின் பதிவு எண் போலியானது என்பதும் தெரியவந்தது.

    மேலும் பிடிபட்ட 2 பேரும் பல இடங்களில் செயின் பறிப்பு, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×