search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைக்கோல் விற்பனை மும்முரம்
    X

    வைக்கோல் விற்பனை மும்முரம்

    • வைக்கோல் விற்பனை மும்முரம் அடைந்துள்ளது.
    • கட்டுகள் ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை ஆகிறது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெரியாறு கால்வாய் நீரை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டதை முன்னிட்டு சோழவந்தான் மற்றும் திருவலவாய நல்லூர், திருவேடகம், ஊத்துக்குளி, மேலக்கால், நாராயணபுரம், ராயபுரம், ரிஷபம், கருப்பட்டி, இரும்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயம் தீவிரமாக நடைபெற்றது.

    இருபோக சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் தற்போது அறுவடை பணிகள் முடிந்துள்ளன. இதையடுத்து வயல்களில் உள்ள வைக்கோல்களை நவீன எந்திரம் மூலம் பிரிக்கும் பணி நடந்தது. 30 கிலோ எடையுள்ள கட்டுக ளாக கட்டப்பட்டு வைக்கோல் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த வைக்கோல் கட்டுகள் ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை ஆவதால் விவசாயிகள் தற்போது தங்களது நிலங்களில் வைக்கோலை பிரித்து விற்பனை செய்யும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    Next Story
    ×