search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க மானியம்
    X

    பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க மானியம்

    • பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க மானியம் வழங்கப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • இதில் 50 சதவீத மானிய அடிப்படையில் அதிக பட்சமாக ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படும்.

    மதுரை

    தமிழக அரசு, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் "வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம்" மானியத்தில் அமைக்கும் புதிய திட்டத்தை கடந்த 2021-2022-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. மதுரை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகள் தங்கள் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை தங்கள் விளைநிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகளுமின்றி குறித்த நேரத்தில் செய்திடவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி, நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்க த்துடனும் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன. தொழில் முனைவோர், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இம்மை யங்கள் மானியத்தில் அமைத்துத் தரப்படும். இம்மையங்கள் ரூ.8 லட்சம் செலவில் அமை க்கப்படுகின்றன. இதில் 50 சதவீத மானிய அடிப்படையில் அதிக பட்சமாக ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படும்.

    மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள், வேளாண்மைப் பொறியியல் துறையின் மதுரை மற்றும் உசிலம்பட்டி உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம்.

    மாவட்ட கலெக்டரின் மாவட்ட அளவிலான செயற்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்து தரப்படும். மேலும், விவரங்களுக்கு அருகாமையிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளரை (வே.பொ) அணுகி பயன்பெறலாம்.

    இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×