search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காந்தி ஜெயந்தியன்று கிராமசபை கூட்டங்கள்
    X

    காந்தி ஜெயந்தியன்று கிராமசபை கூட்டங்கள்

    • மதுரை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும்.
    • கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராமசபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், திட்டப் பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்.

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அண்ணா மறுமலர்ச்சித்திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டக் கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம்,ஜல் ஜீவன் திட்டம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த தொழில்கள், 2022-23-ஆம் ஆண்டு பயனாளிகள் விவரங்கள் கிராம சபையில் ஒப்புதல் பெறுதல் போன்ற கூட்டப்பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

    பொதுமக்கள் கிராம சபை விவாதங்களில் பங்கேற்று பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×