search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனாட்சி அம்மன் கோவில் : தொட்டியில் இறங்கி உற்சாக குளியல் போட்ட பார்வதி யானை
    X

    மீனாட்சி அம்மன் கோவில் : தொட்டியில் இறங்கி உற்சாக குளியல் போட்ட பார்வதி யானை

    • மீனாட்சி அம்மன் கோவிலில் தொட்டியில் இறங்கி பார்வதி யானை உற்சாக குளியல் போட்டது.
    • இதற்காக தமிழக அரசு ரூ.23.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது.

    மதுரை

    உலகப்புகழ் பெற்ற தலங்களில் மீனாட்சி அம்மன் கோவில் குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் பார்வதி என்ற பெண் யானை உள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு பார்வதி யானைக்கு கண்களில் வெண்புரை பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பார்வை குறைபாடு உருவானது. இதைத்தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து கால்நடை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் பார்வதி யானைக்கு சிகிச்சை அளித்தனர். இதன் விளைவாக கண்புரை நோய் முற்றிலும் குணமாகி, பழைய நிலைக்கு வந்தது. மேலும் பார்வதி யானைக்கு மன அழுத்தத்தை நீக்கும் பயிற்சி தரப்பட வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் யானை நீச்சல் அடித்து குளிக்க வசதியாக, குளியல் தொட்டி (தெப்பம்) கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு ரூ.23.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதன் அடிப்படையில் மீனாட்சி அம்மன் கோவில் வளா கத்தில் யானை தெப்பம் கட்டப்பட்டது.

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அப்போது பார்வதி யானைக்காக கோவில் வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள யானை தெப்பம் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் ஊழியர்கள் பார்வதி யானையை அழைத்து வந்தனர்.

    தண்ணீரைப் பார்த்ததும் யானைக்கு உற்சாகம் ஏற்பட்டது. தொட்டியில் இறங்கிய பார்வதி யானை உற்சாகத்தில் அங்கும் இங்கும் ஓடி உற்சாக குளியல் போட்டது. இது பார்வை யாளர்களை கவர்ந்தது.

    Next Story
    ×