search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உண்டியலில் சேமித்த பணத்தை ராணுவ வீரர்களின் நலனுக்கு வழங்கிய சிறுமி
    X

    இந்திய ராணுவ வீரர்களின் நலனுக்காக நிதி உதவி வழங்கிய சிறுமி தனுஷ்கா தனது பெற்றோர் மற்றும் சகோதர, சகோதரிகளுடன் இருப்பதை படத்தில் காணலாம்.

    உண்டியலில் சேமித்த பணத்தை ராணுவ வீரர்களின் நலனுக்கு வழங்கிய சிறுமி

    • ராணுவ வீரர்களின் நலனுக்கு உண்டியலில் சேமித்த பணத்தை சிறுமி வழங்கினார்.
    • ரூ.7,999-ஐ கலெக்டரை சந்தித்து வழங்கி உள்ளார்.

    மதுரை

    மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கார்த்திகா. இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இதில் 2-வது மகளான தனுஷ்கா அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை சுரேஷ்குமார் தனது குடும்பத்தினருடன் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவல கத்திற்கு வந்தார். அவர்கள் கலெக்டர் சங்கீதாவை சந்தித்தனர்.

    அப்போது சிறுமி தனுஷ்கா தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணம் ரூ.7 ஆயிரத்து 999-ஐ இந்திய ராணுவ வீரர்க ளின் நலனுக்காக வழங்கு வதாக கூறி கலெக்டரிடம் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் சங்கீதா, மாணவி தனுஷ்காவிற்கு பாராட்டு தெரிவித்தார்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், எஙகளது மகள் தனுஷ்கா சிறுவயதில் மாறுவேட போட்டியின்போது ராணுவ உடை அணிந்து கலந்து கொண்டார்.அப்போது ராணுவம் குறித்து ஆர்வம் அதிகரித்தது. நாட்டிற்காக தன்னுயிரை பற்றி கருதாமல் பாடுபடும் ராணுவ வீரர்களின் தியாகங்கள் குறித்து எடுத்து கூறினோம். நாட்டிற்காக உயிரை பணயம் வைத்து பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு தன்னால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என எண்ணிய தனுஷ்கா, எல்.கே.ஜி. முதல் உண்டியலில் சிறுகசிறுக பணத்தை சேமிக்க தொடங்கினார். தற்போது அந்த பணம் ரூ.7,999-ஐ கலெக்டரை சந்தித்து வழங்கி உள்ளார் என்றனர்.

    Next Story
    ×