search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    • இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சம்பவத்தன்று அங்கு வந்த குமார், மனைவியுடன் தகராறு செய்து 2 மகன்களை யும் அழைத்து சென்று விட்டார்.

    மேலூர்

    மேலூர் சிலோன் காலனியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி காயத்திரி. இவர்களுக்கு ஹேமநாத் (வயது 11), கோகுல்நாத் (9) என்ற 2 மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காயத்திரி 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று அங்கு வந்த குமார், மனைவியுடன் தகராறு செய்து 2 மகன்களை யும் அழைத்து சென்று விட்டார். இதனால் விரக்தி அடைந்த காயத்திரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செயது கொண்டார்.

    இதுகுறித்து மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பயிற்சி) முகைதீன் அப்துல்காதர், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகன்களை பிரித்து கணவர் அழைத்து சென்றதால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×