search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் நிறுவனத்தில் தீ விபத்து
    X

    தனியார் நிறுவனத்தில் தீ விபத்து

    • திருமங்கலம் அருகே தனியார் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
    • இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் கப்பலூர் தொழிற்பேட்டையில் நித்தியானந்தம் என்பவர் தனியார் டெக்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு இந்த நிறுவனத்தில் எந்திரம் இயங்கி கொண்டிருந்த பொழுது திடீரென்று மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து திருமங்கலம் தீயணைப்பு போலீசார் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து எந்திர மோட்டார்கள், மூலப்பொருட்கள், தறிகள் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×