search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிக மாத்திரைகள் தின்று பெண் தற்கொலை
    X

    தற்கொலை

    அதிக மாத்திரைகள் தின்று பெண் தற்கொலை

    • வயிற்றுப் புற்று நோயால் அவதிப்பட்ட பெண் அதிக மாத்திரைகள் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    • கே.புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை

    மதுரை கே.புதூர் கற்பகா நகர், சூசை மனைவி ஜோஸ்பின்கிளாரா (வயது 52). இவருக்கு வயிற்று புற்றுநோய் இருந்தாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இருந்தபோதிலும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஜோஸ்பின் கிளாரா சம்பவத்தன்று காலை வீட்டில் அதிகப்படியான மாத்திரைகள் தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக கே.புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×