search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலதிபரிடம் போலி 500 ரூபாய் கட்டுகளை கொடுத்த நூதன மோசடி
    X

    தொழிலதிபரிடம் போலி 500 ரூபாய் கட்டுகளை கொடுத்த நூதன மோசடி

    • தொழிலதிபரிடம் போலி 500 ரூபாய் கட்டுகளை மோசடி செய்துள்ளனர்.
    • இதற்கு மூளையாக செயல்பட்ட ரவிச்சந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கப்பலூர் காந்தி நகரை சேர்ந்தவர் கனகரத்தினம், ரெடிமேட் ஆடை தயாரிக்கும் தொழில் செய்து வரும் இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசபட்டியை சேர்ந்த ரவிசந்திரன் என்பவர் போனில் தொடர்பு கொண்டார். உங்களுக்கு ரூ.10 லட்சம் கடன் சலுகை உள்ளது. அதனை பெற வேண்டுமானால் ரூ.60 ஆயிரம் கமிஷன் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதனை நம்பிய கனகரத்தினம் கடன் பெற ஒப்புக்கொண்டார். இதற்காக கனகரத்தினம் அரசபட்டியை சேர்ந்த ராஜேந்திரன்(53), மதுரை வண்டியூரை சேர்ந்த வீரபத்திரன் ஆகியோருக்கு ரூ.30 ஆயிரம் கமிஷன் கொடுத்தாக தெரிகிறது. இதனை அடுத்து சம்பவத்தன்று 2 பேரும் கனகரத்தினத்திடம் ரூ.7.5 லட்சத்தை பேப்பரில் மடித்து கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு சென்று பார்த்த கனகரத்தினத்திறகு் அதிர்ச்சி காத்திருந்தது.பக்கவாட்டில் 500 ரூபாய் நோட்டுகள் போல் காட்சியளிக்கும் அவை வெற்றுத்தாளாக இருந்தது. உடனே இதுகுறித்து கனகரத்தினம், ரவிச்சந்திரனிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் அவை அனைத்தும் கருப்பு பணம். ஒரு குறிப்பிட்ட திரவியம் தடவினால் பணமாக மாறிவிடும் என்று கூறியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கனகரத்தினம் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன், வீரபத்திரனை கைது செய்தனர். இதற்கு மூளையாக செயல்பட்ட ரவிச்சந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×