search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எஸ்ஸார் கோபி இல்ல திருமண விழா
    X

    எஸ்ஸார் கோபி இல்ல திருமண விழா

    • எஸ்ஸார் கோபி இல்ல திருமண விழா மதுரையில் நாளை நடக்கிறது.
    • அமைச்சர்கள், கட்சி பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

    மதுரை

    மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி ஐடா ஸ்கட்டர் அரங்கத்தில் நாளை 18-ந் தேதி தி.மு.க. மதுரை மாநகர் மாவட்ட முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி- சுப்புலட்சுமி ஆகியோரின் மகள் வெண்ணிலா என்ற மீனாவுக்கும், கோவில்பட்டி நாகஜோதி குரூப் ஆப் கம்பெனியின் இயக்குனர் காளிராஜன்- கயா கலப் ஆயுர்வேத சோப் இயக்குனர் சாந்தி தேவி ஆகியோரின் மகன் மகேஷ் கிருஷ்ணனுக்கும் காலை 9 முதல் 10.30 மணிக்குள் திருமணம் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெரிய சாமி, நேரு , பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன், மூர்த்தி, கே.ஆர்.பெரிய கருப்பன், மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மணிமாறன் உள்பட தி.மு.க. முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு வரும் அனைவரையும் வரவேற்பதற்கான ஏற்பாடுகளை வில்லாபுரம் பகுதி கழகச் செயலாளர் 84 வது வார்டு கவுன்சிலர் போஸ் முத்தையா, அவனியாபுரம் மேற்கு பகுதி தி.மு.க. செய லாளர் ஈஸ்வரன், பகுதி துணை செயலாளர் பிரபாகர், 84 வது வட்ட செயலாளர் பாலா என்ற பாலசுப்பிர மணியன், கவுன்சிலர் குட்டி என்ற ராஜா ரத்தினம், வட்ட துணை செயலாளர் வக்கீல் விஜயன் ஆகியோர் செய்துள்ளனர்.

    Next Story
    ×